சென்னை : சட்டமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டியே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான 6 கோடி பாமாயில் பாக்கெட்கள், 60,000 டன் துவரம் பருப்பு, 60,000 மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதலுக்கான ஒப்பந்தம் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயிலை எந்தவித தங்கு தடையுமின்றி விநியோகம் செய்யும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
