எனது துறையின் சாதனைகளை மறைத்து பரப்பப்படும் அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்: அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை

சென்னை: எனது துறையின் சாதனைகளை மறைத்து பரப்பப்படும் அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறது. நாளொரு புகார், பொழுதொரு அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி, அமலாக்கத்துறையின் கண்களையும் உறுத்துகிறது என்றும் கூறினார்.

Related Stories: