டெல்லி: வந்தே மாதரம் பாடலின் மீதான சிறப்பு விவாதத்தை மக்களவையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே மாதரம் என்ற மந்திரம் நாட்டின் விடுதலை இயக்கத்திற்கு புதிய தாக்கத்தையும், உச்சத்தையும் வழங்கியது. வருங்கால தலைமுறையினருக்கு இந்த விவாதம் ஒரு பாடமாக அமையும். வந்தே மாதரம் பாடலின் மீதான சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார்.
