விராலிமலை,டிச.7: விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.9) நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராலிமலை துணை மின்நிலையத்தில் 11 கேவி மின் பாதையில் மின்விநியோகம் பெறும் பகுதிகளான (விராலிமலை நகர பகுதி நீங்கலாக) விராலூர், மலைக்குடிப்பட்டி, ராஜளிபட்டி, கொடும்பாளூர், விட்டமாபட்டி, பாட்னாபட்டி, கவரபட்டி, செவல்பட்டி, செட்டியபட்டி, கோட்டைகாரன்பட்டி, கோமங்கலம், தேன்கனியூர், சீத்தப்பட்டி, பொய்யாமணி, நம்பம்பட்டி, செவனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வரும் டிச.9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெ.ஜேம்ஸ் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
