கேப் டவுடன்: தென்னாப்பிரிக்காவின் நிர்வாக தலைநகரான பிரிட்டோரியாவிற்கு அருகே சவுல்ஸ்வில்லே டவுன்ஷிப்பில் மதுபான விடுதி இயங்கி வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென நுழைந்த 3 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
