×

சபரிமலையில் கூட்டம் அலைமோதல் 16 நாளில் 14 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். நேற்று வரை கடந்த 16 நாளில் 14 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. இவர்களை திருப்பி அனுப்ப முடியாததால் தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர். சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது. நேற்று வரை 16 நாட்களில் 14 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். கடந்த சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விடுமுறை தினங்கள் என்ற போதிலும் பக்தர்கள் வருகை சற்று குறைவாகவே காணப்பட்டது. ஆனால் நேற்று காலை முதல் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்தது. அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த போது பக்தர்கள் வரிசை மரக்கூட்டம் வரை காணப்பட்டது. நேற்று மதியத்திற்குப் பின்னர் இரவு வரை பக்தர்கள் வருகை மிக அதிகமாக காணப்பட்டது.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Ayyappa temple ,Mandala Puja ,
× RELATED இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக...