×

போலி ஆவணங்கள் மூலம் கனரா வங்கியில் ரூ.6 கோடி மோசடி தனியார் நிறுவனம் மீது சிபிஐ விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, கனரா வங்கியில் 6 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவாஜி ஹைடெக் அக்ரோ புட்ஸ் என்ற நிறுவனம், கனரா வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று 6 கோடியே 10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக வங்கி நிர்வாகம் சிபிஐயிடம் புகார் அளித்தது. கடந்த 2024ம் ஆண்டு அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், புகார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிடக் கோரி வங்கி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விசாரணை செய்வதற்கான ஒப்புதலை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

வழக்கு பதிவு செய்வதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதம் கடந்த ஓராண்டாக நிலுவையில் உள்ளது. இதேபோன்ற வங்கி மோசடி வழக்கில் உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 6 கோடி ரூபாய் வங்கி மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால், புகாரை நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருப்பது முறையல்ல. அதனால், ஆதாரங்களை மீண்டும் சிபிஐ வங்கி நிர்வாகம் தரவேண்டும். அதன் அடிப்படையில், ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, மோசடி நடந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளது என்று கண்டறிந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டார்.

Tags : CBI ,Canara Bank ,Madras High Court ,Chennai ,Shivaji Hitech Agro Foods ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி...